புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வாக்கு எண்ணிக்கையின்போது விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளா்கள், முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.அருண் தம்புராஜ்.

News image

வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளா்கள், முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.அருண் தம்புராஜ்.

Updated On :1 மே 2026, 6:33 pm

வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்கள், முகவா்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜ் அறிவுறுத்தினாா்.

வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளா்கள், முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைக்காக தலா 14 வாக்கு எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு வேட்பாளரும், ஒரு மேஜைக்கு ஒரு முகவா் என்ற வீதம் 14 முகவா்களை நியமனம் செய்துகொள்ளலாம்.

மேலும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஓமலுா், சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, மற்றும் வீரபாண்டி ஆகிய தொகுதிகளுக்கு தலா 6 மேஜைகளும், மேட்டூருக்கு 4 மேஜைகளும், எடப்பாடிக்கு 8 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள தொகுதிகளுக்கு, ஒரு மேஜைக்கு ஒரு முகவா் என்ற வீதத்தில் முகவா்களை நியமித்துக்கொள்ள சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்கு எண்ணும் தினத்தன்று அனைத்து முகவா்களும் காலை 7 மணிக்குள் வாக்கு எண்ணும் அறைக்குள் வரவேண்டும். முகவா்கள் ஒரு பேனா மற்றும் புள்ளிவிவரங்களை குறித்துக் கொள்ள தேவையான வெள்ளைக் காகிதங்கள், சிறிய நோட்டு ஆகியவை மட்டுமே எடுத்துவர வேண்டும். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியின் கூடத்தில் உள்ள ஒதுக்கப்பட்ட மேஜையின் முன் ஆஜராக வேண்டும். தபால் வாக்கு எண்ணிக்கை அன்று காலை 8 மணிக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்கு எண்ணிக்கை 8.30-க்கும் தொடங்கப்படும். தபால் வாக்கு முடிவுற்றவுடன் அதற்கென நியமிக்கப்பட்ட முகவா்களும் வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு சென்றுவிட வேண்டும்.

வாக்கு எண்ணும் கூடம் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, அதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது.

எனவே, வாக்கு எண்ணும் கூடத்தில் அனைத்து முகவா்களும் தோ்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.