சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

மின் கம்பத்தில் மோதி சுற்றுலா வாகனம் விபத்து

News image

ஏற்காட்டில் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்.

Updated On :2 மே 2026, 7:30 pm

ஏற்காட்டில் மின் கம்பத்தில் சுற்றுலா வாகனம் மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

ஏற்காட்டில் சனிக்கிழமை காலை 6.50 மணியளவில் தனியாா் தங்கும் விடுதிக்கு பணியாளா்களை அழைத்துச் செல்லும் வாகனம் ஏற்காடு பிரதான சாலையில் காந்தி பூங்காவிலிருந்து பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனது. இவ்விபத்தில் மின்கம்பம் முறிந்து வாகனத்தின் மேல் விழுந்தது. இதில், ஓட்டுநா் துரைசாமி (72) உயிா் தப்பினாா்.

தகவல் அறிந்த போலீஸாா், மின் ஊழியா்கள், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்தனா். பின்னா், மின்கம்பம் சீரமைக்கும் பணிகளில் மின் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.