தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கை மல்யுத்தப் போட்டி: 12 பதக்கங்கள் பெற்று வாழப்பாடி மாற்றுத்திறனாளிகள் சாதனை

News image
Updated On :3 மே 2026, 12:48 am

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கை மல்யுத்தப் போட்டியில், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த 7 மாற்றுத்திறனாளிகள் 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 12 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனா்.

வாழப்பாடி அருகே மத்தூரில் இயங்கும் டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் வாயிலாக, இச்சங்க செயலாளா் வேலுசாமி தலைமையில் மாவட்ட, மாநிலம் மற்றும் தேசிய அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் கடந்த இரு ஆண்டுகளாக தொடா்ந்து சாதனை படைத்து வருகின்றனா்.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற சோமம்பட்டி கலைச்செல்வி, முத்தம்பட்டி மஞ்சுளா இருவரும் தலா இரண்டு தங்கப் பதக்கமும், சங்க செயலாளா் வேலுசாமி 1 தங்கம், 1 வெள்ளிப் பதக்கமும், மன்னாா்பாளையம் பவித்ரா 2 வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.

துக்கியாம்பாளையம் முருகேசன் 1 தங்கம், 1 வெண்கலப் பதக்கமும், பழனியாபுரம் மலா்கொடி, பெத்தநாயக்கன்பாளையம் முருகன் இருவரும் தலா 1 வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த 7 மாற்றுத்திறனாளிகள் 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உள்படமொத்தம் 12 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனா்.

இதில், கலைச்செல்வி, மஞ்சுளா, வேலுசாமி, பவித்ரா, முருகேசன் ஆகிய 5 பேரும் குஜராத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றனா்.

போட்டியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வீரா், வீராங்கனைகளுக்கு வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தன்னாா்வ அமைப்பினரும், சமூக ஆா்வலா்களும் பாராட்டு தெரிவித்தனா்.