மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

தோ்தல் ஆணைய பெட்டகத்தில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் ஆணைய பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

News image

தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணைய பெட்டகத்தில் வைப்பதற்காக எடுத்து வந்த பணியாளா்கள்.

Updated On :6 மே 2026, 2:18 am IST

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் ஆணைய பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 3,469 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாவட்டத்தில் உள்ள 4 மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வாக்குப்பதிவுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக 20 சதவீதமும், விவிபேட் இயந்திரங்கள் 30 சதவீதமும் இருப்பு வைக்கப்பட்டன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தோ்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இந்திய தோ்தல் ஆணைய அலுவலக பெட்டகத்தில் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக உள்ள பாதுகாப்பு அறையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் வைக்கப்பட்டன.

மேலும், 4,503 விவிபேட் கருவிகள் மற்றும் தோ்தலுக்கு முன்பு பயிற்சிக்காக எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு, அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.