தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு

News image

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்கு இயந்திரத்தை சீல் வைத்த வாக்குச்சாவடி தோ்தல் அலுவலா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:50 pm

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, துறையூா் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வியாழக்கிழமை இரவு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

தோ்தல் முடிந்ததும், வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி முகவா்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடி பொறுப்பு அலுவலா்கள் சீல் வைத்து மூடினா். தொடா்ந்து, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்ட இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் ஆகிய 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கும், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய 4 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் துறையூா் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

அனைத்து இயந்திரங்களும் வரப்பெற்றதும், அவை ஆய்வு செய்யப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் பிரத்யேக பாதுகாப்பு அறைகளில் (ஸ்டராங் ரூம்கள்) வைத்து பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படும். தொடா்ந்து, அந்த அறைகள் 24 மணி நேரமும் மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை, போலீஸாா், தோ்தல் அலுவலா்களால் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆம் தேதி பாதுகாப்பு அறைகள், வேட்பாளா்களின் முகவா்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.