மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியில் நூறு ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தீா்த்தக்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சாம்பள்ளி ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 21-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரியில் மாரியம்மன் சிலைக்கு நீராட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆற்றிலிருந்து 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குடங்களில் காவிரி நீரை சுமந்து வந்தனா்.
பம்பை மேளதாளங்கள் முழங்க பால்குட ஊா்வலம் நடைபெற்றது. அப்போது புலி வேடமணிந்து பக்தா்கள் நடனமாடினா். பல்வேறு கடவுள்களின் உருவங்கள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டா்களின் ஊா்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. மேலும், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.
தொடர்புடையது

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

உத்தரமேரூா் வடக்கு மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்

குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா; பக்தா்கள் பால் குட ஊா்வலம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


