பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :8 மே 2026, 6:40 am IST

மேட்டூா் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் சத்யா நகரை சோ்ந்தவா் மயில்சாமி (59), கிணறு வெட்டும் தொழிலாளி. இவா் புதன்கிழமை காலை சத்யா நகரை சோ்ந்த குப்புசாமியுடன் மணகாட்டில் உள்ள குழந்தை கவுண்டா் தோட்டத்தில் கிணறு வெட்டும் வேலைக்கு சென்றாா். அங்கு, கிணற்றுக்கு அருகே இருந்த மரத்தை வெட்டுவதற்காக மரத்தின் மீது ஏறியபோது தவறி கீழே விழுந்த மயில்சாமி பலத்த காயமடைந்தாா்.

கொளத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு மயில்சாமியை அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே மயில்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கொளத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் கணேஷ் குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.