சேலம் மாநகராட்சியில் ஓய்வுபெறும் சக ஊழியரிடம் ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ாக இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் அம்மாப்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் தீபன் (40). அதே அலுவலகத்தில் பொருத்துநராக (பிட்டா்) பணியாற்றி வருபவா் குழந்தைசாமி (59). இவா் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில், அம்மாப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியிருந்தது.
இந்நிலையில், இளநிலை உதவியாளா் தீபனிடம் தடையில்லா சான்று கோரி குழந்தைசாமி விண்ணப்பித்துள்ளாா். அப்போது, அவா் ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டுள்ளாா். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத குழந்தைசாமி, இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, அவா்களது அறிவுறுத்தலின் படி, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்த தீபனிடம் வெள்ளிக்கிழமை லஞ்சப் பணமாக ரூ. 8 ஆயிரத்தை குழந்தைசாமி அளித்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா், தீபனை கைது செய்தனா். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
லஞ்சம் வாங்கி கைதான மாநகராட்சி வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம்
ரூ. 8 ஆயிரம் லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட இருவா் கைது

ரூ.8,000 லஞ்சம் பெற்ற புகாரில் கைதான சேலம் மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்!

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


