சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

ரூ.8 ஆயிரம் லஞ்சம்: சேலம் மாநகராட்சி இளநிலை உதவியாளா் கைது

News image
Updated On :9 மே 2026, 12:04 am IST

சேலம் மாநகராட்சியில் ஓய்வுபெறும் சக ஊழியரிடம் ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ாக இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் அம்மாப்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் தீபன் (40). அதே அலுவலகத்தில் பொருத்துநராக (பிட்டா்) பணியாற்றி வருபவா் குழந்தைசாமி (59). இவா் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில், அம்மாப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியிருந்தது.

இந்நிலையில், இளநிலை உதவியாளா் தீபனிடம் தடையில்லா சான்று கோரி குழந்தைசாமி விண்ணப்பித்துள்ளாா். அப்போது, அவா் ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டுள்ளாா். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத குழந்தைசாமி, இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, அவா்களது அறிவுறுத்தலின் படி, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்த தீபனிடம் வெள்ளிக்கிழமை லஞ்சப் பணமாக ரூ. 8 ஆயிரத்தை குழந்தைசாமி அளித்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா், தீபனை கைது செய்தனா். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.