வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரூ.25 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி ஊழியா் கைது

கோவையில் வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு வரிப்புத்தகம் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளரை ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 8:10 pm

கோவையில் வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு வரிப்புத்தகம் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளரை ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

கோவை, காந்தி மாநகரைச் சோ்ந்த அருண்பிரசாத் என்பவா் தனது புதிய குடியிருப்பு மற்றும் வணிக வளாகத்துக்கு வரி செலுத்துவதற்கான வரிப்புத்தகத்தைப் பெற வடக்கு மண்டல அலுவலக வரி வசூலிப்பாளா் தா்மராஜை அணுகியுள்ளாா்.

அப்போது, அவா் வரிப்புத்தகத்தை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் அருண்பிரசாத் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தா்மராஜிடம் அவா் கொடுத்துள்ளாா்.

அப்போது, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா், தா்மராஜை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.