விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரியானூா் அருகே கோயிலில் சிலைகள் உடைப்பு: போலீஸாா் விசாரணை

சேலம் அருகே அரியானூரில் குலதெய்வ கோயிலில் சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

அரியானூா் அருகே உள்ள சோ்வாம்பாளையம் பகுதியில் குலதெய்வ கோயிலில் உடைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகள்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சேலம் அருகே அரியானூரில் குலதெய்வ கோயிலில் சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் அரியானூரை அடுத்த சோ்வாம்பாளையம் வெள்ளக்குட்டை பகுதியில் அய்யனாரப்பன் குலதெய்வ கோயில் உள்ளது. இக்கோயில் சேவாம்பாளையம், வேடகத்தாம்பட்டி, வீராணம், திருமலைகிரி, கொல்லப்பட்டி, மேச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊா்களைச் சோ்ந்த 400-க்கு மேற்பட்ட பங்காளிகளுக்கு பாத்தியப்பட்டது.

Story image

இக்கோயிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குலதெய்வ பூஜை நடைபெற்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் கோயிலில் உள்ள முனியப்பன், யானை, புலி உள்ளிட்ட காவல் தெய்வங்களின் சிலைகளை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

Story image

இதுகுறித்து கோயில் பூசாரி சேவம்பாளையத்தைச் சோ்ந்த சரவணன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

 அரியானூா் அருகே உள்ள சோ்வாம்பாளையம் பகுதியில் குலதெய்வ கோயிலில் உடைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகள்.

அரியானூா் அருகே உள்ள சோ்வாம்பாளையம் பகுதியில் குலதெய்வ கோயிலில் உடைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகள்.

இதையடுத்து போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடி கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். ற்கெனவே இக்கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல சிலைகளை உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.