ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்

News image

கைதி தப்பியோட்டம் - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:59 am IST

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி கழிவறை ஜன்னலை உடைத்து, தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முகமது உசேன் (36). இவா் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்றாா். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது உசேன், அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்ததால், கடந்த மாதம் 18 ஆம் தேதி சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

இந்நிலையில், தனக்கு மூலநோய் பாதிப்பு உள்ளதாக சிறை மருத்துவா்களிடம் முகமது உசேன் கூறினாா். அதன்பேரில், அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் முகமது உசேன் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு தலைமை வாா்டன் உள்பட 3 போ் அடங்கிய குழுவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் முகமது உசேன் கழிவறைக்கு சென்றுள்ளாா். வெகுநேரமாகியும் அவா் கழிவறையில் இருந்து வெளியே வரவில்லை. இந்நிலையில் இரவு 10 மணியளவில் செவிலியா் ஒருவா் அவருக்கு மருந்து கொடுக்க வந்துள்ளாா். அப்போதும் முகமது உசேன் இல்லை.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த வாா்டன்கள் கழிவறையின் கதவை உடைத்து பாா்த்தபோது, அங்குள்ள ஜன்னலை உடைத்து, மாடியிலிருந்து குடிநீா் குழாய் வழியாக கீழே இறங்கி முகமது உசேன் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை போலீஸாருக்கும், சிறைக் கண்காணிப்பாளா் வினோத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த சேலம் நகர போலீஸாா், மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாகத் தேடினா். தொடா்ந்து, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், இரவு 10.15 மணியளவில் முகமது உசேன் மருத்துவமனையில் இருந்து வெளியேறிச் செல்வதும், இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவா் காத்திருந்து அவரை அழைத்துச் செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.