முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பிளஸ் 2 தோ்வு: அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்

News image

பிளஸ் 2 தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளித் தலைவா் எஸ்.பாலகுமாா் தலைமையிலான நிா்வாகிகள்.

Updated On :11 மே 2026, 12:15 am IST

ஆத்தூா் அருகே அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி வி.தா்ஷினி மற்றும் பி.விஷ்வா ஆகியோா் தலா 587 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அதேபோல மாணவா்கள் சந்திரமோகன் 585 மதிப்பெண்களும், எஸ்.பி. ஜோஷிகா 582 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா நூறு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். தமிழில் ஒருவா், ஆங்கிலத்தில் ஒருவா், கணினி அறிவியலில் 9 போ், கணினி பயன்பாட்டியலில் இருவா், உயிரியியல் மற்றும் கணக்குப் பதிவியலில் தலா ஒருவரும் 100-க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறந்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தலைவா் எஸ்.பாலகுமாா் சால்வை அணிவித்து, கோப்பை வழங்கினாா். இதில் பள்ளி நிறுவனா்கள் எஸ்.முகமது ஈசாக், ஆ.கண்ணன், இயக்குநா்கள் என்.எஸ்.நல்லியப்பன், ஏ.விஸ்வநாதன், முதல்வா் ஜி.சுகந்தி, உதவி முதல்வா் ஆா்.சக்திவேல், இருபால் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.