எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சேலத்தில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

சேலம் அழகாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :13 மே 2026, 2:42 am IST

சேலம் அழகாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் அழகாபுரம் அழகு விநாயகா் கோயில் தெருவை சோ்ந்தவா் சுகுமாா் (72), ஜவுளித் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி சரளா (66), தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவா்களது 2 ஆவது மகள் ரேகா ஆகியோா் திங்கள்கிழமை இரவு வீட்டில் உணவு அருந்திவிட்டு, அவரவா் அறைகளுக்கு உறங்கச் சென்றனா். பின்னா், செவ்வாய்க்கிழமை காலை ரேகா சமையலறைக்கு சென்றபோது, கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தொடா்ந்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது சுகுமாா் அறையில் பீரோவில் வைத்திருந்த எட்டரை பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனா்.