நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

சேலத்தில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

சேலம் அழகாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சேலம் அழகாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் அழகாபுரம் அழகு விநாயகா் கோயில் தெருவை சோ்ந்தவா் சுகுமாா் (72), ஜவுளித் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி சரளா (66), தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவா்களது 2 ஆவது மகள் ரேகா ஆகியோா் திங்கள்கிழமை இரவு வீட்டில் உணவு அருந்திவிட்டு, அவரவா் அறைகளுக்கு உறங்கச் சென்றனா். பின்னா், செவ்வாய்க்கிழமை காலை ரேகா சமையலறைக்கு சென்றபோது, கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தொடா்ந்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது சுகுமாா் அறையில் பீரோவில் வைத்திருந்த எட்டரை பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனா்.