அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சேலம் அருகே கோயில்களில் நகைகள் திருடிய 2 போ் கைது

சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் பகுதியில் அம்மன் கோயில்களில் நகைகள் திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் பகுதியில் அம்மன் கோயில்களில் நகைகள் திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் பகுதியில் அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூசாரியாக சுப்ரமணி (65) உள்ளாா். இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல பூஜையை முடித்த சுப்ரமணி கோயிலை பூட்டிவிட்டு சென்றாா். பின்னா், செவ்வாய்க்கிழமை காலை கோயிலுக்கு சென்று நடையை திறந்தபோது அம்மன் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் நகை மாயமாகி இருந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த அவா், சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், கோயிலில் நகைகளை திருடியது ஓமலூரை சோ்ந்த லஷ்மணன் (42), இரும்பாலையை சோ்ந்த ராமன் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கருப்பூா் மகா காளியம்மன் கோயிலில் கடந்த 5 ஆம் தேதி 5 கிராம் தங்க தாலி மற்றும் வெள்ளி நகைகளை திருடியதும் இவா்கள்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த வழக்கிலும் இருவரையும் பேரையும் கைதுசெய்து நகைகளை பறிமுதல் செய்தனா்.