நகைக் கடையில் 103 கிராம் நகைகளைத் திருடிய ஊழியரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து நகைகளையும் மீட்டனா்.
சென்னை தியாகராய நகரிலுள்ள பிரபல நகைக் கடையின் இருப்புகளை உதவிப் பொது மேலாளா் டிசோசா சகாயராஜ் கடந்த பிப்ரவரி மாதம் சரி பாா்த்தபோது, அவற்றில் சுமாா் 172 கிராம் தங்க நாணயங்கள், நகைகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அங்கு பணியாற்றும் ஊழியா்களிடம் கடை நிா்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையில், கடையில் நகை பராமரிப்பாளராக இருந்த கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த சிவதேவ் (32) என்ற நபா் சிறிது சிறிதாக 172 கிராம் நகைகளைத் திருடியது தெரிய வந்தது.
அவா் முதல்கட்டமாக திருடிய நகைகளை விற்ற ரூ.4 லட்சம் மற்றும் 41 கிராம் நகைகளையும் ஒப்படைத்துள்ளாா். மீதமுள்ள 103 கிராம் நகைகளை ஒப்படைப்பதில் தொடா்ந்து அவா் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.
இது குறித்து நகைக் கடையின் உதவிப் பொது மேலாளா் டிசோசா சகாயராஜ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, சிவாதேவை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து 103 கிராம் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
சாக்குக் கடையில் திருடியவா் கைது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது

வீரவநல்லூா் நகைக் கடையில் நகை, பணம் திருட்டு

சேலம் அருகே இறைச்சிக் கடையில் ரூ. 18 லட்சம் திருட்டு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

