ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

நூற்றாண்டு பழைமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது

வாழப்பாடியில் நூற்றாண்டு பழைமையான புளியமரம் திங்கள்கிழமை காலை திடீரென வேரோடு சாய்ந்தது.

News image

வாழப்பாடி ரயில் நிலையம் அருகே வேரோடு சாய்ந்த நூற்றாண்டு பழைமையான புளியமரம்.

Updated On :19 மே 2026, 1:32 am IST

வாழப்பாடியில் நூற்றாண்டு பழைமையான புளியமரம் திங்கள்கிழமை காலை திடீரென வேரோடு சாய்ந்தது. மரத்தடியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

வாழப்பாடியில் தம்மம்பட்டி பிரதான சாலையில் நூறு ஆண்டுகளுக்கு முன்னா் வைக்கப்பட்ட புளியமரங்கள் இன்றும் காணப்படுகின்றன. வாழப்பாடி ரயில் நிலையம் பின்புறம் காசி விஸ்வநாதா் கோயில் அருகில் நிழல் கொடுத்துவந்த புளியமரம் திங்கள்கிழமை காலை திடீரென வேரோடு சாய்ந்தது. அப்போது, மரத்தடியில் பொதுமக்கள், பயணிகள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. பின்னா், புளிய மரம் அறுத்து அகற்றப்பட்டது.