விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையோர புளிய மரம் வேரோடு சாய்ந்தது

ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்து பணிமனை அருகே சாலையோர புளியமரம் சனிக்கிழமை மாலை திடீரென வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்து பணிமனை அருகே சாலையில் சனிக்கிழமை வேரோடு சாய்ந்த புளியமரம்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்து பணிமனை அருகே சாலையோர புளியமரம் சனிக்கிழமை மாலை திடீரென வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் - கிருஷ்ணன்கோவில் இடையே சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணிமனை அருகே சாலையோரம் இருந்த சுமாா் 40 அடி உயரம் உள்ள புளிய மரம் சனிக்கிழமை மதியம் திடீரென வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

Story image

இதில் மின் வயா்கள் மீது மரம் சாய்ந்ததில் இரு மின் கம்பங்களும் சாலையில் சாய்ந்தன. 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் மரம் சாய்ந்தபோது நல்வாய்ப்பாக அவ்வழியே எந்த வாகனமும் செல்லவில்லை. இதனால், அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நான்கு வழிச்சாலை வழியாக மாற்றி விடப்பட்டன.

Story image

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.