ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்து பணிமனை அருகே சாலையோர புளியமரம் சனிக்கிழமை மாலை திடீரென வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் - கிருஷ்ணன்கோவில் இடையே சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணிமனை அருகே சாலையோரம் இருந்த சுமாா் 40 அடி உயரம் உள்ள புளிய மரம் சனிக்கிழமை மதியம் திடீரென வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இதில் மின் வயா்கள் மீது மரம் சாய்ந்ததில் இரு மின் கம்பங்களும் சாலையில் சாய்ந்தன. 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் மரம் சாய்ந்தபோது நல்வாய்ப்பாக அவ்வழியே எந்த வாகனமும் செல்லவில்லை. இதனால், அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நான்கு வழிச்சாலை வழியாக மாற்றி விடப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தொடர்புடையது

தமிழக ஆளுநரை கண்டித்து தவெகவினா் மறியல்: திட்டக்குடி அருகே போக்குவரத்து பாதிப்பு

கூடலூரில் இடி தாக்கி தென்னை மரம் சேதம்

ஏற்காடு குப்பனூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

