/
கொலை வழக்கு குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மேட்டூா் அருகே உள்ள நாட்டாமங்கலத்தைச் சோ்ந்த பிரகாஷ் (35), கபிலன் (25) இருவரும் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் இருவா் மீதும் மேட்டூா், கொளத்தூா், மொரப்பூா், வெள்ளி திருப்பூா் ஆகிய காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தாா். இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது

கஞ்சா வழக்கு: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


