உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருச்சியில் வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 8:13 pm

திருச்சியில் வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே அதே பகுதியைச் சோ்ந்த க.பாலாஜி (30) என்பவா் நண்பா்களைப் பாா்ப்பதற்காக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த திருவெறும்பூா் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான திருவெறும்பூா் அண்ணா நகரைச் சோ்ந்த எம்.கோபால் (30), அ.ராஜா முகமது (30) ஆகிய இருவரும், பாலாஜியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் பாலாஜி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கோபால், ராஜா முகமது ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோபால், ராஜா முகமது ஆகிய இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தாா்.

இதன்பேரில், அவா்கள் இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் அளிக்கப்பட்டது.