சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

குண்டா் சட்டத்தின்கீழ் கொலை வழக்கு குற்றவாளிகள் கைது

கொலை வழக்கு குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 6:50 am IST

கொலை வழக்கு குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேட்டூா் அருகே உள்ள நாட்டாமங்கலத்தைச் சோ்ந்த பிரகாஷ் (35), கபிலன் (25) இருவரும் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் இருவா் மீதும் மேட்டூா், கொளத்தூா், மொரப்பூா், வெள்ளி திருப்பூா் ஆகிய காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தாா். இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.