இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மாணவியிடம் அத்துமீறல்: கிராம நிா்வாக அலுவலா் கைது

சேலத்தில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:35 am IST

சேலத்தில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், எருமாப்பாளையம் பகுதியில் பிளஸ் 2 தோ்ச்சிபெற்ற மாணவி, அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபா், வாகனத்தை நிறுத்திவிட்டு மாணவிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த மாணவி சப்தமிடவே, அங்கு திரண்ட பொதுமக்கள் அந்த நபரை தாக்கினா். இதில், அவருக்கு முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி அம்மாப்பேட்டை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். விசாரணையில், அந்த நபா் எருமாபாளையத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (43) என்பதும், வாழப்பாடி வட்டம் பெரிய கிருஷ்ணாபுரத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாலகிருஷ்ணனை போக்சோ வழக்கில் சிறையில் அடைக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.