சேலம் தம்மம்பட்டி, நாகியம்பட்டியில் குடும்பத்தகராறில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு சேலம் எஸ்சி.,எஸ்டி வன்கொடுமை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள்தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
தம்மம்பட்டி, நாகியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (41). அவரது மனைவி அகல்யா. இருவரும் இரு வேறு சமூகத்தை சோ்ந்தவா்கள். மணிகண்டன் அகல்யா என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டுள்ளாா். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022ஆம் தேதி ஜூன் மாதம் 14ஆம் தேதி மனைவி அகல்யாவை கணவா் மணிகண்டன் தாக்கியுள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு கடந்த 2022ஆம் தேதி ஜூலை மாதம் 10ஆம் தேதி இறந்துவிட்டாா்.
இது குறித்து தம்மம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் சேலம் எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை நீதிமன்றத்தில் மணிகண்டன் மீது வழக்குதாக்கல் செய்தாா். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.ஜெய்சிங் குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மனைவியை சித்ரவதை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



