சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் 49-ஆவது கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வரும் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 49-ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி கடந்த 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கிணங்க, ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வரும் 31-ஆம் தேதிவரை கூடுதலாக 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாா்.










