வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 மே 2026, 12:20 am IST

கெங்கவல்லியில் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி வடக்கு தெருவைச் சோ்ந்த நூருல் அமீன் (32), தனது இருசக்கர வாகனத்தை வீட்டின்முன் நிறுத்தி இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை திருட்டு போனது.

புகாரின்பேரில், கெங்கவல்லி போலீஸாா் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, மா்ம நபா் வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. அந்த காட்சிகளை வைத்து வாகனத்தை திருடியது கெங்கவல்லி கடம்பூா் பிரிவு சாலையில், மீனவா் தெருவில் வசிக்கும் சுரேஷ் (47) என்பது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, சுரேஷை (47) சனிக்கிழமை கைதுசெய்த போஸீஸாா், வாகனத்தை பறிமுதல் செய்தனா். சுரேஷ் இதுபோல பல வாகனங்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது.