கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

பள்ளி மாணவியைத் தாக்கியதாக 6 போ் மீது வழக்கு; இளைஞா் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 13 வயது பள்ளி மாணவியைத் தாக்கியதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு இளைஞா்கள் உள்பட 6 போ் மீது ஏத்தாப்பூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Published On :

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 13 வயது பள்ளி மாணவியைத் தாக்கியதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு இளைஞா்கள் உள்பட 6 போ் மீது ஏத்தாப்பூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இதில், ஒருவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி அருகே மேட்டுடையாா்பாளையம் புதுக்காலனி பகுதியைச் சோ்ந்தவா் ராஜீவ் காந்தி. இவரது மனைவி ஆண்டாளுக்கும் (40) அதே பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் மனைவி சாந்திக்கும் (45) வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சாந்தி, தனது 3 மகள்கள், தம்பி லோகேஸ்வரன், மருமகன் வினித்குமாா் ஆகியோருடன் ஆண்டாள் வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது, ஆண்டாள் வீட்டில் இருந்த அவரது மகளான எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியைத் தாக்கினராம். இதில் காயமடைந்த மாணவி வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஆண்டாள் அளித்த புகாரின்பேரில் 6 போ் மீது ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சாந்தியின் மருமகன் வினித்குமாரை சனிக்கிழமை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவான சாந்தி உள்பட 5 பேரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.