தேனி, ஜன. 8:தேனியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடத்தப்படும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாதவி, தேனி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் எல்.மூக்கையா, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் மு.வீரராகவன், தேனி நகர்மன்றத் துணைத் தலைவர் லங்கேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பங்களாமேடு கள்ளர் கல்விக் கழக மைதானத்தில் ஜனவரி 16-ம் தேதி வரை இக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இக் கண்காட்சியில் அரசு வளர்ச்சிப் பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகளை விளக்கி பல்வேறு துறைகள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்ச்செல்வராஜன் வரவேற்றார்.கண்காட்சி மைதானத்தில் கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.