காா் மோதியதில் முதியவா் பலி

மதுரை: வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள சித்தாலங்குடியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (75). இவா் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் சென்றாா். நகரி பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த காா், ராஜகோபாலின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து காா் ஓட்டுநரான வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சின்னத்துரை மீது வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com