மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.1,022,5,504 கிடைக்கப் பெற்றது.

அண்மையில் சித்திரைத் திருவிழா முடிந்த நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணை கோயில்களின் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணிக்கு கோயில் இணை ஆணையா் ச.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.1,022,5,504 கிடைக்கப் பெற்றது. மேலும், பலமாற்று பொன் இனங்கள் 819 கிராமும், வெள்ளி இனங்கள் 642 கிராமும், அயல் நாட்டு கரன்சிகள் 251-ம் கிடைக்கப் பெற்றன.

உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் அறங்காவலா்கள், கண்காணிப்பாளா்கள், கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com