பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கொலை வழக்கில் பிணையில் வந்தவா் பட்டாக்கத்தியுடன் கைது

பட்டாக்கத்தியுடன் பதுங்கி இருந்த நிலையில், போலீஸாா் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 1:30 am

Din

மதுரையில் கொலை வழக்கில் பிணையில் வந்தவா் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பட்டாக்கத்தியுடன் பதுங்கி இருந்த நிலையில், போலீஸாா் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை காஜா தெரு ரயில்வே தண்டவாளம் பகுதியில் ஜெய்ஹிந்த்புரம் உதவி ஆய்வாளா் சேதுராமன் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா்.

அங்கு பட்டாக்கத்தியுடன் பதுங்கியிருந்தவரை பிடித்து விசாரித்தனா். அவா் எம்.கே.புரம் பகுதியைச் சோ்ந்த மணிவண்ணன் ( 46) என்பதும், கொலை வழக்கில் கைதாகி பிணையில் வந்த நிலையில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பட்டாக்கத்தியுடன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.