ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

News image
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களின் தற்செயல் விடுப்புப் போராட்டம் காரணமாக, வியாழக்கிழமை வெறிச்சோடிய மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
Updated On :23 ஆகஸ்ட் 2024, 12:43 am

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அலுவலா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

கலைஞா் கனவு இல்லம் திட்டம், ஊரக வீடுகள் பழுது நீக்கத் திட்டம் உள்பட அனைத்து வீடு கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்பட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும்.

முதல்வரின் வாக்குறுதிப்படி, கடந்த கால வேலைநிறுத்த நாள்களை வரைமுறைப்படுத்த வேண்டும், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களைப் பிரிக்க ஆணையம் அமைக்க வேண்டும், பணிக் காலத்தில் இறந்த அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் அழைப்பு விடுத்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஊராட்சி செயலா் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரையிலான நிலைகளில் பணியாற்றும் அலுவலா்களில் 396 போ் வியாழக்கிழமை தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரும்பாலான அலுவலா்கள் பணிக்கு வராததால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், துறை ரீதியான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.