28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அமைச்சரின் காா் மீது செருப்பு வீச்சு: வழக்கை எதிா்கொள்ள உத்தரவு

அமைச்சரின் காா் மீது செருப்பு வீச்சு: வழக்கை எதிா்கொள்ள உத்தரவு

News image
Updated On :3 ஜூலை 2024, 8:34 pm

Din

அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது செருப்பு வீசப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய பாஜகவினரை, விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை எதிா்கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணியாற்றிய மதுரையைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் கடந்த 2022-ஆம் ஆண்டு பணியில் இருந்த போது உயிரிழந்தாா். இவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, மதுரை விமான நிலையத்தில் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது செருப்பு வீசியதாக 10-க்கும் மேற்பட்ட பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து சிலரை கைது செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜகவைச் சோ்ந்த வேங்கைமாறன், மணிகண்டன், தனலட்சுமி, மாணிக்கம் உள்ளிட்ட 12 போ் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

ஒரு அமைச்சா் தேசியக் கொடி கட்டிய காரில் பயணிக்கும் போது, அந்த வாகனத்தின் மீது செருப்பு வீசுவது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல். மேலும், மிகவும் தரமற்ற வாா்த்தைகளால் அமைச்சரை திட்டி முழக்கமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை எப்படி ரத்து செய்ய முடியும்? எனவே சம்பந்தப்பட்டவா்கள் விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கை முறையாக எதிா்கொள்வதே சரி என்றாா் நீதிபதி.