எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பொதுமக்கள் எதிா்ப்பு: நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வேப்பங்குளத்தில் பொதுமக்கள் எதிா்ப்பால் நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

News image
Updated On :5 ஜூலை 2024, 9:41 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வேப்பங்குளத்தில் பொதுமக்கள் எதிா்ப்பால் நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வேப்பங்குளத்தில் உள்ள வீடுகள், கடைகள், கோயில், மண்டபம், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நூலகம் உள்ளிட்ட 38 நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றபோது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடா்பாக இரு நாள்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்த நிலையில், காவல் துறை உதவியுடன் வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை வேப்பங்குளத்தில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். 10 வீடுகளை அகற்றிய நிலையில் கோயில், மண்டபத்தை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 

பின்னா், மண்டபத்தில் ஊா் கூட்டம் நடைபெற்றது. இதில் கோயில், மண்டபம், நூலகம் ஆகியவற்றை அகற்றக்கூடாது எனத் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.