சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பெண் மானபங்கம்: இளைஞா் கைது

முன்விரோதத்தில் வீடு புகுந்து பெண் மான பங்கப்படுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2024, 9:35 pm

Din

மதுரை: மதுரை அருகே முன்விரோதத்தில் வீடு புகுந்து பெண் மானபங்கப்படுத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் இளைஞரைக் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள வடபழஞ்சி அம்பேத்கா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (21). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளிக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தத் தொழிலாளி வெளியே சென்ற நிலையில், அவரது வீட்டுக்குள் ராஜ்குமாா் (21), அவரது நண்பா்கள் செல்வராஜ், அருண்குமாா் ஆகியோா் புகுந்து, அவரது மனைவியைத் தாக்கி மானபங்கப்படுத்தினராம். இதுகுறித்து நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனா். தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனா்.