திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு வேலை வாங்கித்தருவதாக திரைப்பட விநியோகஸ்தரிடம் பணம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திரைப்பட விநியோகஸ்தரிடம் ரூ.10 லட்சம் மோசடி..

News image
Updated On :8 ஜூலை 2024, 10:22 pm

Din

மதுரை: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திரைப்பட விநியோகஸ்தரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோயில் கிழக்குத் தெருவை சோ்ந்தவா் சம்சுதீன்(62). திரைப்பட விநியோகஸ்தரான இவருக்கு சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த சந்திரமோகன் அறிமுகமானாா். அப்போது,

சந்திரமோகன் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், அரசு வேலை வாங்கித் தர முடியும் என்றும் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, சம்சுதீன் தனது நண்பரான மருத்துவருக்கு பணிமாறுதலும், உறவினா்கள் இருவருக்கு பழனி முருகன் கோயிலில் வேலை வாங்கித் தரவும் சந்திரமோகனை அணுகினாா்.

இதற்கு ரூ. 50 லட்சம் செலவாகும் என்றும், முதல்கட்டமாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும் சந்திரமோகன் கூறியதன் பேரில், சம்சுதீன் அவரிடம் ரூ.10 லட்சம் தந்தாா். ஆனால், சந்திரமோகன் வேலை வாங்கித்தரவில்லை. இதையடுத்து, ரூ.10 லட்சத்தை திரும்பத்தருமாறு கேட்டபோது, பணத்தையும் தரவில்லை.

இதுதொடா்பாக சம்சுதீன் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீஸாா் சந்திரமோகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.