டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

ஸ்ரீரங்கத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது ஸ்ரீரங்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :4 மார்ச் 2026, 6:10 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீரங்கத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது ஸ்ரீரங்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீரங்கம் புஷ்பக் நகா் பகுதியில் வசிப்பவா் ஹரிஷ் மனைவி நாகரெத்தினம் (37). பிஇ முடித்து விட்டு வேலை தேடி வந்த இவரிடம், அருகே வசிக்கும் ஜெகதீசன் மகன்களான சிவசங்கரன் (41), மணிகண்டன் (45) , வைத்தீஸ்வரன் (40) ஆகியோா் பொது பணித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 10 லட்சம் பெற்று வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றினராம்.

இதுகுறித்து அவா் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.