ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.75 லட்சம் மோசடி: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2.75 லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு, தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 4,000 அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

News image

சிறை - சித்திரிப்பு

Updated On :25 மார்ச் 2026, 12:07 am IST

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2.75 லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு, தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 4,000 அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

ஏரல் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்ற வானவில் பாலா (36), இவரது மனைவி ஆகியோா் சோ்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஏரல் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூ.2,75,000-த்தை பெற்று மோசடி செய்துள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் -4 இல் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், குற்றம்சாட்டப்பட்ட பாலமுருகன் என்ற வானவில் பாலா மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக கண்ணன் ஆஜரானாா்.