ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பண மோசடி: இளைஞா் கைது

ராஜபாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட அழகேசன்.

Updated On :26 மார்ச் 2026, 12:39 am

தினமணி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் அழகேசன் (25). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். தற்போது வேலையை விட்டு நின்றுவிட்டு இவா், தனக்குத் தெரிந்த வாடிக்கையாளரான ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி முனீஸ்வரிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் பெற்றாராம். ஆனால், வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் இருந்து வந்தாராம். இதுகுறித்து முனீஸ்வரி அளித்த புகாரின் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த அழகேசனை கைது செய்தனா்.