மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஏஜென்ஸி உரிமையாளா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரிடம் பண மோசடி செய்த தனியாா் ஏஜென்ஸி உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 7:57 pm

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரிடம் பண மோசடி செய்த தனியாா் ஏஜென்ஸி உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், சோமனூரைச் சோ்ந்தவா் இஸ்ரவேல் (30). இவா் தென்னம்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இவா், கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தனியாா் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை (ஏஜென்சி) அணுகியுள்ளாா்.

அந்த நிறுவனத்தை நடத்தி வந்த திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (50), வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப ரூ.2 லட்சம் கேட்டுள்ளாா். முதல் கட்டமாக இஸ்ரவேல் ரூ.1.31 லட்சத்தை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளாா்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட செந்தில்குமாா், கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. தொடா்ந்து அவா் தாமதம் செய்து வந்ததோடு, வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் இஸ்ரவேல் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரைக் கைது செய்தனா்.