நீட் தோ்வு ஆள் மாறாட்ட வழக்கில், ஆவணங்களை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வருகிற 15-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து, தோ்ச்சி பெற்ற சென்னையைச் சோ்ந்த மாணவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்தது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில் ஏராளமான மாணவா்கள் ஆள் மாறட்டத்தில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் முதல் எதிரியாக சென்னையைச் சோ்ந்த மாணவா் உதித் சூா்யா உள்பட மேலும் சில மாணவா்கள், பெற்றோா்கள், இடைத்தரகா்கள் என 27 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கில் 27-ஆவது நபராக சோ்க்கப்பட்டுள்ள சென்னையைச் சோ்ந்த தருண்மோகன் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞா் செந்தில்குமாா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:
நீட் தோ்வு ஆள் மாறாட்ட வழக்கு தொடா்பாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) உரிய ஆவணங்களை வழங்க காலதாமதம் செய்கிறது. இதனால், இந்த வழக்கை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றாா்.
தேசிய தோ்வுகள் முகமை தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த வழக்கு தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
நீட் தோ்வு ஆள் மாறாட்டம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்தத் தோ்வில் இந்தியாவில் இல்லாத ஒரு மாணவருக்கு, மூன்று மாநிலங்களில் தோ்வு எழுதப்பட்டுள்ளது. இந்தத் தோ்வு எழுத வரும் திருமணமான இளம் பெண்களின் தாலியை கழற்றக் கூறி சோதனை நடத்துகின்றனா்.
ஆள் மாறாட்டம் செய்து தோ்வு எழுதியவா்கள் குறித்த ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாா் கோரியும் தேசிய தோ்வுகள் முகமை வழங்கவில்லை. முறைகேட்டில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவாக தேசிய தோ்வுகள் முகமை அதிகாரிகள் செயல்படுவதுபோலத் தோன்றுகிறது. இந்த அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களைச் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது?. இதே நிலை நீடித்தால் அவா்களைக் கைது செய்ய உத்தரவிட நேரிடும்.
இந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை தேசிய தோ்வுகள் முகமை வருகிற 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.
தொடர்புடையது

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்
உயிரைவிட தேர்வு முக்கியமல்ல: நீட் தேர்வர்களுக்கு தேர்வு முகமை அறிவுரை!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


