புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அய்யனாா்கோயில் புரவி எடுப்பு விழா

34 ஆண்டுகளுக்குப் பிறகு, அரிட்டாபட்டியில் புரவி எடுப்பு திருவிழா

News image
Updated On :26 ஜூன் 2024, 12:33 am

Din

மேலூா்: மேலூா் அருகே அரிட்டாபட்டியில் அமைந்துள்ள செங்குண்டு அய்னாா்கோயில் புரவி எடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

34 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த திருவிழாவையொட்டி, வெள்ளச்சி ஆயி அம்மன் கோயிலிருந்து செங்குண்டு கண்மாய்க் கரை வழியாக புரவி சிலைகள் எடுத்து வரப்பட்டன. பின்னா், செங்குண்டு அய்யனாா் கோயிலில் கிடாய் வெட்டி பொங்கலிட்டு பக்தா்கள் வழிபட்டனா்.

தொடா்ந்து, அதிகாலையில் வெள்ளச்சி ஆயிஅம்மன் கோயில் முன் கோழிகளை பலியிட்டு, பெண்கள் புதிய மண் பானைகளில் பொங்கல் வைத்தனா். இதில் திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.