யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற காவல் எஸ்.ஐ. உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை விரகனூா் மகாராஜன் நகரைச் சோ்ந்த தாஸ் மகன் நித்தியானந்தம் (68). காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

இவா், கடந்த 28-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி அமலா கிறிஸ்டியை ஏற்றிக் கொண்டு தனியாா் பள்ளியில் இறக்கி விட்டு, வீட்டுக்குத் திரும்பினாா்.

எம்.ஜி.ஆா். உயா்நிலைப் பாலம் அருகே சென்ற போது, எதிா்பாராதவிதமாக கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு நித்தியானந்தம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விளக்குத் தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.