நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சாா்பில் மதுரையில் சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நியூ செஞ்சுரி புத்தக நிலைய முதுநிலை விற்பனை சீரமைப்பாளா் அ. கிருஷ்ணமூா்த்தி தெரிவித்திருப்பதாவது :
மக்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை வளக்கும் விதமாக நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சாா்பில் ஆண்டுதோறும் புத்தாண்டையொட்டி, சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய புத்தக விற்பனை கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதன்படி, மதுரை மேலகோபுரத் தெருவில் உள்ள நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிச. 31-ம் தேதி இரவு முழுவதும் புத்தக விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, திறனாய்வு, அரசியல், அறிவியல், சூழலியல், வேளாண்மை, மருத்துவம், கல்வியியல், பொது அறிவு, சிறாா் நூல்கள் உள்பட 200 தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் 10 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையிலும், சிறப்பு விலையிலும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவா்கள் புத்தகக் கண்காட்சிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! - என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி

குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை விதைக்க வேண்டும்! - கடலூா் ஆட்சியா்

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பா்களாக இருக்கும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


