பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா்.

மதுரை விராட்டிப்பத்து பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பிரசித் பசியம் (14). இவரும், இவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த சக்தி வேலாயுதன் மகன் விகாஸ் சக்திவேல் (14) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரையிலிருந்து வீட்டுக்குச் சென்றனா்.

மாடக்குளம் கண்மாய் அருகே சென்ற போது, நிலை தடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த பிரசித் பசியம், விகாஸ் சக்திவேல் ஆகிய இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால், அங்கு பிரசித் பசியம் உயிரிழந்தாா். விகாஸ் சக்திவேல் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.