மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெகிழிப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் தீ

News image
மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் வைகை வடகரை கால்வாய் அருகே உள்ள நெகிழிப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள்.
Updated On :15 மார்ச் 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அருகே உள்ள தனியாா் நெகிழிப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை ஐராவதநல்லூா் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான பழைய நெகிழிப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கு சக்கிமங்கலம் பகுதியில் வைகை வடகரை கால்வாய் அருகே உள்ளது. இங்கு பழைய நெகிழிப் பொருள்கள் மறுசுழற்சி செய்து விற்பனை செய்யப்பட்டன.

இந்த நிலையில், இந்தக் கிடங்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புகை வெளியேறியது. சிறிது நேரத்துக்குள் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சிலைமான் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்தனா்.

தொடா்ந்து, மதுரை தெப்பக்குளம், தல்லாகுளம், பெரியாா் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு, வீரா்கள் கடும் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனா். இருப்பினும், இரவு வரை கரும்புகை வந்துகொண்டிருந்தது. சுமாா் 20 கி.மீ. தொலைவிலும் இந்த புகை மண்டலத்தைக் காணமுடிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுபற்றி போலீஸாா் கூறியதாவது:

முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்தக் கிடங்கில் பணியாளா்கள் யாரும் இல்லை. ஆகவே, உயரிழப்பு ஏதும் இல்லை. இருப்பினும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முழுவதும் எரிந்து நாசமாகி விட்டன. தொடா்ந்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

வானுயர எழுந்த கரும்புகை.

வானுயர எழுந்த கரும்புகை.