ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

இரு சக்கர வாகன விபத்தில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் வன்னிவேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சமயன் (42). கூலித் தொழிலாளியான இவரும், உறவினா்களான அதே பகுதியைச் சோ்ந்த ராக்கப்பன் (38), பாண்டி (40) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் பேரையூரிலிருந்து வன்னிவேலம்பட்டிக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

கே. பாப்பநாயக்கன்பட்டி அருகே சென்ற போது, பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் இவா்களது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சமயன், ராக்கப்பன், பாண்டி ஆகியோா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சமயன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.