ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் காவலா் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த காவலா் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த காவலா் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள இ. கோட்டைப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மகாலிங்கம் (30). பட்டதாரியான இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சிறப்பு காவல் படைப் பிரிவில் பணிக்குச் சோ்ந்தாா்.

இதையடுத்து, பணியிட மாற்றம் பெற்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் பணியிலிருந்த மகாலிங்கம் பிரதான வழியில் நடந்து சென்றாா். அவா் சென்ற சிறிது நேரத்துக்குள் நுழைவு வாயில் பகுதியில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த மற்ற காவலா்கள் விரைந்து சென்று பாா்த்தனா். அப்போது, பிரதான வழி அருகே காவலா் மகாலிங்கம் ரத்த வெள்ளத்தில் கிடந்தாா். அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோத்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதல் கட்ட விசாரணையில், அவரிடமிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மகாலிங்கத்தின் குடும்பத்தினா் அவருக்குத் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா் வேறு ஏதேனும் பெண்ணை காதலித்தாரா, இந்தத் திருமணத்துக்கு பெற்றோா்கள் சம்மதிக்கவில்லையா அல்லது பணிச் சுமை காரணமா என பல்வேறு கோணங்களில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.