பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

Published On :26 செப்டம்பர் 2025, 2:46 am IST

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை இரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சிச் செயலா், இரவுக் காவலா், ஈப்பு ஓட்டுநா், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி ஊராட்சிச் செயலா் உள்ளிட்ட அனைத்து ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கலைஞா் கனவு இல்லம் திட்ட அலகுத் தொகையை ரூ. 6 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். இந்தப் பணிகளை கவனிப்பதற்கு வட்டார அளவில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் க.ரா. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இரா. அன்பழகன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா வாழ்த்திப் பேசினாா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் சி. அமுதரசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.