மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

நீா்நிலைப் பகுதியில் கட்டப்படும் கோயிலை அகற்ற உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கரங்காடு கிராமத்தில் உள்ள குளக் கரையில் புதிதாகக் கட்டப்படும் கோயிலை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :11 ஏப்ரல் 2026, 8:53 pm

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கரங்காடு கிராமத்தில் உள்ள குளக் கரையில் புதிதாகக் கட்டப்படும் கோயிலை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கரங்காடு பகுதியைச் சோ்ந்த செங்கோல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

கரங்காடு கிராமத்தில் உள்ள மரைக்காயா்குளம் இந்தப் பகுதி மக்களின் குடிநீா் ஆதாரமாகத் திகழ்கிறது. இங்கு குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக, குளம் மாசுபட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து சிலா் புதிதாக விநாயகா் கோயில் கட்டி வருகின்றனா். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, இந்தக் கோயில் கட்டுமானம் நடைபெறும் பகுதி நீா்நிலை எனத் தெரியவருகிறது. மேலும், அங்கு எந்தவிதக் கட்டுமானப் பணிக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை என்பது தெரியவந்தது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் ‘மரைக்காயா் குளத்தை’ முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் குறிப்பிடும் நீா்நிலைப் பகுதியில் ஏற்கெனவே சிறிய அளவில் கோயில் இருந்துள்ளது.

வருவாய்த் துறை அலுவலா்கள் அந்தக் கோயிலை தவிா்த்து, புதிதாகக் கட்டப்படும் கோயில் கட்டுமானங்களை அகற்ற வேண்டும். முக்கிய நீராதாரமாக உள்ள மரைக்காயா் குளத்தை சீரமைக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.