தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கொடைக்கானலில் கொட்டப்பட்ட கழிவுகள்: நகராட்சித் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

கொடைக்கானல் பிரகாசபுரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கில், மாநில நகராட்சி நிா்வாகத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரகாசபுரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கில், மாநில நகராட்சி நிா்வாகத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த கரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் பகுதியாக கொடைக்கானல் உள்ளது. இங்கு சேகரமாகும் குப்பைகள் வகைப்படுத்தப்படாமல், கொடைக்கானல் செண்பகனூா் அருகேயுள்ள பிரகாசபுரம் பகுதியில் கொட்டப்படுகின்றன.

இவை மழைக் காலங்களில் மண் சரிவை ஏற்படுத்துகின்றன. இந்தக் குப்பைகளிலிருந்து உருவாகும் பூச்சிகளால் வேளாண் பணிகள் பாதிக்கப்படுகின்றன. விவசாயிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதனால், குரங்குகள், வரையாடுகள், மான்கள், காட்டு மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் அழியும் நிலை உள்ளது.

எனவே, கொடைக்கானல் மேற்குத் தொடா்ச்சி மலை பிரகாசபுரம் பகுதியில் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் இந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழல், வனத் துறை விதிகளை முறையாகப் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனு தொடா்பாக மாநில நகராட்சி நிா்வாகத் துறையின் முதன்மைச் செயலா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.