தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடற்கரையில் கட்டடங்கள் விவகாரம்: மத்திய சுற்றுச்சூழல் செயலா் பதிலளிக்க உத்தரவு

கடற்கரையில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Updated On :24 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

கடற்கரையில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஜோசப் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, நீலக் கொடிச் சான்றிதழ் (புளூ பிளாக்) பெற்ற கடற்கரைப் பகுதியில் கடலிலிருந்து 10 மீ. தொலைவில் கட்டடங்களைக் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு கடலோரச் சுற்றுச்சூழல் விதிகளை தளா்த்தும் வகையில் உள்ளது. இதனால், கடற்கரையின் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். மேலும், கடற்கரையில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவை கடல் சாா் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானவை. ஆகவே, நீலக் கொடி சான்றிதழ் பெற்று, கடற்கரையில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் வகையில், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.